Latestமலேசியா

Op Birth: போலி பிறப்புப் பத்திரம் வாங்க 5,000 முதல் 50,000 ரிங்கிட் வரை கொடுக்கும் கும்பல்

கோலாலம்பூர், ஏப்ரல்-18,குழந்தைகளை வாங்கி விற்கும் கும்பலொன்று, அந்நட வடிக்கைகளைக் கச்சிதமாக முடித்துக் கொடுக்க, சம்பந்தப்பட்டவர்களுக்கு 5,000 முதல் 50,000 ரிங்கிட் வரை கொடுப்பது அம்பலமாகியுள்ளது.

குழந்தைகளை வாங்க மற்றும் பிறப்புப் பத்திரங்களைத் தயார் செய்ய அத்தொகை கைமாறுகிறது.

2021-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அக்கும்பல், முன்னதாக Op Birth சோதனை நடவடிக்கையில் சிக்கியது.

இதுவரை 400,000 ரிங்கிட் கைமாறியிருப்பது, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

என்றாலும், அக்கும்பலின் பின்னணியில் செயல்படுவோரை அடையாளம் காண வேண்டி, மேற்கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருவதாக MACC கூறியது.

சமூக ஊடகங்கள் வாயிலாகவும், நண்பர்கள் வாயிலாகவும் விளம்பரம் செய்வதை அக்கும்பல் ஓர் யுக்தியாகக் கொண்டுள்ளது.

பிறப்புப் பத்திரத்தில் போலி விவரங்களைக் கொடுத்ததன் பேரில் கடந்த புதன் கிழமை, 14 பேரை MACC கைதுச் செய்தது.

அவர்கள் கொடுத்த விவரங்களைப் பரிசோதித்ததில், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் அப்படி குழந்தைகள் பிறந்ததாக பதிவே இல்லையென்பது விசாரணையில் தெரிய வந்தது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!