
கெரிக், ஜூன்-9 – பேராக், கெரிக்கில் UPSI பல்கலைக்கழகப் பேருந்து விபத்துக்குள்ளானதில் மரணமடைந்த மாணவர்களில் 13 பேரது சடலங்கள், சவப்பரிசோதனைக்காக ஈப்போ ராஜா பெர்மாய்சூரி மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளன.
எஞ்சிய 2 சடலங்கள் கெரிக் மருத்துவமனையில் சவப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக, உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடிர் கூறினார்.
காயமடைந்த மாணவர்களும் அதே கெரிக் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய உதவிகளை வழங்கிட ஏதுவாக, UPSI சார்பில் சிறப்பு நடவடிக்கை அறை அமைக்கப்பட்டுள்ளதோடு hotline எனப்படும் அவசர தொலைப்பேசி எண்ணும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்கள் வந்து தங்குவதற்கான ஏற்பாடுகளை உங்கு ஓமார் பாலிடெக்னிக் கல்லூரியும் கெரிக் சமூகக் கல்லூரியும் ஒருங்கிணைத்து வருவதாகவும் Dr சாம்ரி கூறினார்.
இன்று அதிகாலை திரங்கானு, ஜெர்த்தேவிலிருந்து தஞ்சோங் மாலிம் UPSI campus வளாகத்திற்குத் திரும்பும் வழியில், அப்பேருந்து MPV-யுடன் மோதி கவிழ்ந்தது.