Latestமலேசியா

Vape பயன்பாட்டுக்குத் தடை: பஹாங் அரசாங்கம் அதிரடி

குவாந்தான் – ஜூன்-12 – மின்னியல் சிகரெட் அல்லது vape பயன்பாட்டைத் தடைச் செய்ய பஹாங் மாநில அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

vape ஹராம் என பஹாங் முஃப்தி அலுவலகம் ஃபத்வா வெளியிட்டுள்ளதற்கு ஏற்ப இம்முடிவு அமைவதாக, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சைட் இப்ராஹிம் சைட் அஹ்மாட் தெரிவித்தார்.

முஃப்தி முடிவை மே 14-ஆம் தேதி மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் விவாதித்து, அதற்கு பஹாங் சுல்தான் அல் – சுல்தான் அப்துல்லாவின் ஒப்புதலும் பெறப்பட்டது என்றார் அவர்.

அல் -சுல்தான் அப்துல்லா ஏற்கனவே பல முறை vape பயன்பாடு குறித்து கவலை எழுப்பியிருந்தார்.

_vape_பை முழுமையாகத் தடைச் செய்ய வேண்டுமென கடந்தாண்டு நவம்பரில் அவர் வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், vape தடையுத்தரவை அமுலாக்கும் அதே சமயம், இனியும் அப்பழக்கத்தில் ஈடுபட வேண்டாமென்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் மக்கள் மத்தியில் அவ்வப்போது மேற்கொண்டு வருமாறு ஊராட்சி மன்றங்களை சைட் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!