
பத்து மலை, மே 2 – பத்து மலையில் திருத்தளத்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள , மின்படிகட்டு திட்டம் குறித்து மக்கள் எங்களிடம் கேள்வி எழுப்புகிறார்கள். கட்ட நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம், ஆனால் இன்னும் அரசாங்கத்தின் ஒப்புதல் கிடைக்கவில்லை; இதனால் அது இன்னமும் நிலுவையில் இருப்பதாக கூறியுள்ளார் டான் ஸ்ரீ நடராஜா.
கடவுளைதேடி வரும் பக்தர்கள் மட்டுமின்றி நாட்டிற்கே ஒரு சுற்றுலா அடையாளமாக விளங்கும் பத்துமலைக்கு வரும் சுற்றுப்பயணிகளுக்கும் தேவையான வசதிகளை செய்துத்தர எங்களை விடுங்கள் என நடராஜா கேட்டுக் கொண்டார்.
இதனிடையே, 2025ஆம் ஆண்டுக்கான தைப்பூச வசூல் தொகை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதையும் மக்களிடமிருந்து மறைக்கும் எண்ணம் எங்களுக்கில்லை எனவும் அவர் கூறினார்.
நேற்று, பத்துமலை திருத்தளத்தில் நேற்று நடைப்பெற்ற “கந்த சஷ்டி கவசம் பாராயணம்” நிகழ்ச்சிக்கு தலைமையேற்றியப் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இத்தகவலை தெரிவித்தார்