Latestமலேசியா

அவதூறு வழக்கு: ராயரிடம் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரிய பினாங்கு பாஸ் ஆணையர்

ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-24, பாஸ் கட்சியின் பினாங்கு மாநில ஆணையர் ஃபாவ்சி யூசோஃப், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஈராண்டுகளுக்கு முன் தாம் பேசிய பேச்சுக்காக, ராயர் தொடுத்திருந்த அவதூறு வழக்கின் தீர்வின் ஒரு பகுதியாக ஜோர்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஃபாவ்சி அவ்வாறு செய்தார்.

செலவுத் தொகையாக ராயருக்கு 10,000 ரிங்கிட்டை வழங்கவும் அவர் ஒப்புக் கொண்டார்.

2023 ஜூன் இரண்டாம் தேதி பாலேக் பூலாவில் நடைபெற்ற ‘PN Best’ பிரச்சாரக் கூட்டத்தின் போது ‘ராயர் ஓர் இனவாதி, கர்வம் கொண்டவர் மற்றும் பொறுப்பற்றவர்’ என ஃபாவ்சி பேசியிருந்தார்.

அதோடு, மலாய்க்காரர்கள் மற்றும் இந்தியர்களின் வாக்குகள் கிடைக்காமல் போனாலும் தமக்குக் கவலையில்லை என, ஜெலுத்தோங்கில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் ராயர் கூறியதாக ஃபாவ்சி தனது பரப்புரையில் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், அக்குற்றச்சாட்டை முன் வைக்கும் முன், அது உண்மைதானா என்பதை உறுதிச் செய்ய தாம் தவறியதை, தனது மன்னிப்பு வாக்குமூலத்தில் இன்று ஃபாவ்சி ஒப்புக் கொண்டார்.

சம்பவத்தின் போது ‘மன உளைச்சலில்’ இருந்தவர்கள் வாய்மொழியாகக் கூறியதை வைத்து தாம் அப்படியொரு முடிவுக்கு வந்திருக்கக் கூடாது என்பதை இப்போது உணருவதாக ஃபாட்சி சொன்னார்.

இதையடுத்து, அப்பரப்புரையின் போது பேசிய பேச்சுகளை மீட்டுக் கொள்வதாக, பினாங்கு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான அவர் கூறினார்.

முன்னதாக, அவதூறு வழக்கைப் பதிவுச் செய்த ராயர், அடிப்படையற்ற குற்றச்சாட்டை வீசியதற்காக ஃபாவ்சி பகிரங்க மன்னிப்புக் கோருவதுடன், இழப்பீட்டுத் தொகையும் தர வேண்டும் என முறையிட்டிருந்தார்.

இதனிடையே, ராயருக் அவரின் மன்னிப்பை பெரிய மனதுடன் ஏற்றுக் கொண்டார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!