
கராச்சி, மே 24- இந்திய விமான நிறுவனங்கள் தங்கள் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கான தடையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து துறை நேற்று தெரிவித்துள்ளது.
அண்மையில் நடந்த பாகிஸ்தான் இந்தியா போரைத் தொடர்ந்து, ஏப்ரல் 24ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இத்தடையானது ஜூன் 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதன் விளைவு, இந்தியாவிலிருந்து மத்திய ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் விமான பயணங்கள் கிட்டத்தட்ட 2 மணி நேரங்களாகும் நிலையில் விமான கட்டணங்களும் விலையேற்றம் காணலாம் என்று அனுமானிக்கப்படுகின்றது.
முந்தைய வரலாற்று பின்னணியின் அடிப்படையில், இந்த வான்வெளி தடை நீட்டிப்பு, இந்திய நாட்டின் நிதி இழப்பை கூட்டும் என்று இந்திய அரசாங்கத் தரவுவுகள் காட்டுகின்றன.