
கோலாலம்பூர், டிசம்பர் 1 – நாட்டில், மாதம் 8,000 ரிங்கிட்டுக்கும் மேல் வருமானம் பெரும் 64,618 மாணவர்கள் சுமார் 257.56 மில்லியன் ரிங்கிட் PTPTN கடனைத் திரும்பச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளனர்.
8,000 ரிங்கிட்டுக்கும் குறைந்த வருமானம் மற்றும் STR (Sumbangan Tunai Rahmah) உதவித் தொகையைப் பெறாத 196,115 மாணவர்கள் 539.35 மில்லியன் ரிங்கிட் கடனைச் செலுத்தாமல் உள்ளனர். அதே நேரத்தில் STR உதைவித் தொகையைப் பெறும் குறைந்த வருமானம் கொண்ட 967,796 மாணவர்களின் கட்டப்படாத PTPTN கடன் தொகை 10.23 பில்லியன் ரிங்கிட்டாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் STR உதவியைப் பெற்ற 450,522 மாணவர்கள் 4.17 பில்லியன் ரிங்கிட்டையும், STR உதவியைப் பெறாத குறைந்த வருமானத்தைப் பெற்று வரும் 131,396 மாணவர்கள் 697.79 மில்லியன் ரிங்கிட் கடனையும் மற்றும் உயர்ந்த வருமானம் பெரும் 35,324 மாணவர்கள் 362.36 மில்லியன் ரிங்கிட் கடனையும் PTPTN நிறுவனத்திற்குத் திரும்ப செலுத்தியுள்ளனர்.
தற்போது PTPTN கடன் பூரண விலக்கு IPTA மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் IPTS மாணவர்ளுக்கு வழங்கப்படுவதைப் பற்றி PTPTN மீண்டும் பரிசீலித்து வருகின்றது.



