Latestமலேசியா

இலக்கவியல் சூழலை உருவாக்குவதில் முன்னோடியாகத் திகழ மலேசியா பாடுபடுகிறது; கோபிந்த் சிங் தகவல்

கோலாலம்பூர், மே-14 – நம்பிக்கையுடன் கூடிய, பொறுப்பாற்றல் மிக்க, அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய இலக்கவியல் தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்குவதில் மலேசியா உறுதியாக உள்ளது.

அந்நிலைப்பாட்டை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்தினார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற AI தலைமைத்துவ மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் அவ்வாறு சொன்னார்.

நாடு முழுவதிலுமிருந்து தனியார் நிறுவன உயர் அதிகாரிகளும், நிறுவன உரிமையாளர்களும் இந்தத் தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டனர்.

WEF எனப்படும் உலகப் பொருளாதார மன்றம் “AI காலம்” என குறிப்பிடும் காலக்கட்டத்திற்குள் மலேசியா நுழைவதை அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

AI காலக்கட்டமானது, குவாண்டம் கணினி, உயிரியல் தொழில்நுட்பம், மற்றும் மேம்பட்ட இணைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவான ஒரு யுகம்.

மேம்பட்ட இணைப்புத் தொழில்நுட்பங்களின் இணைவு மூலம் உருவாகும் இந்த புதிய காலத்தில், நம்பிக்கை என்பது முழு அமைப்பின் செயல்பாட்டை இயங்கச் செய்யும் அடித்தளமாகும்.

இந்த மாற்றம் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தப் புரட்சியில் சமூகங்கள் எவ்வாறு வாழ்கின்றன, பொறுப்புகளை ஏற்கின்றன, தொழில்நுட்பத்தை எவ்வாறு நிர்வகிக்கின்றன என்பதை மறுவரையறை செய்கின்றது.

இந்த மாற்றத்தை முன்னெடுப்பதில், தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் (NAIO) மற்றும் அதன் ஆறு நிபுணத்துவம் வாய்ந்த குழுக்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

இந்த குழுக்கள் அரசாங்கம், தொழில், கல்வி மற்றும் சமூக அமைப்புகளின் 170க்கும் மேற்பட்ட நிபுணர்களுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு சுதந்திரம், ஒழுங்குமுறை, நெறிமுறைகள், பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டை சார்ந்தத் திட்டங்களை உருவாக்குகின்றன.

இந்நிலையில் ஆசியான் வட்டாரத்திலும் நம்பிக்கையுடன் கூடிய சூழலை உருவாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

வரும் ஆகஸ்டில் கோலாலம்பூரில் நடைபெறும் ASEAN AI மாநாட்டில் அது தொடர்பான விவாதங்கள் நடைபெறும் எனவும் கோபிந்த் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!