
மோரிஸ்டவுன், மே 26 – உக்ரைனில் ரஷ்யாவின் வார இறுதி குண்டுவீச்சு தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுயிருக்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் ( Valadimir Putin ) நடவடிக்கையினால் தாம் மகிழ்ச்சி அடையவில்லையென டிரம்ப் தெரிவித்தார். அவருக்கு என்ன ஆனது, அவர் ஏன் நிறைய பேரை கொல்கிறார் என டிரம்ப் கேள்வி எழுப்பினார். வாஷிங்டனுக்கு புறப்பட தயாரானபோது நியூ ஜெர்சியின் மோரிஸ்டவுனில் உள்ள விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது இத்தகவலை வெளியிட்டார்.
தலைநகர் கீவ் உட்பட, ஞாயிற்றுக்கிழமை இரவு உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா 367 டுரோன்கள் மற்றும் ஏவுகணைககள் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்வினையாக டிரம்ப் பேசினார். இதுவரை நடந்த போரின் மிகப்பெரிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதோடு 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
உக்ரைய்னில் மூன்று வருடங்களாக நடைபெற்று வரும் போரில் இரு தரப்பினரையும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வைக்க டிரம்ப் முயற்சித்து வருகிறார், கடந்த வாரம் புதினுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அவர் பேசியுள்ளார். நடந்து வரும் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சாத்தியக்கூறுகளை புதின் எழுப்பியுள்ளார். புதினுடன் இணைந்து செயல்பட்டபோதிலும் உக்ரெய்ன் நகரங்களில் ஏவுகனை தாக்குதல்கள் மூலம் மக்களை கொல்லும் அவரது நடவடிக்கை பிடிக்கவில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.