
கர்நாடகா, மே 13 – நேற்று நள்ளிரவில், 33 வயதான கன்னட மற்றும் துளு திரைப்பட நடிகர் ராகேஷ் பூஜாரி, மாரடைப்பால் காலமானார். இவர்,கிலாடிகலு 3 நகைச்சுவை நிகழ்வின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நேற்றிரவு, மெஹந்தி நிகழ்வொன்றில் மயங்கி விழுந்து இறந்தது, உள்ளூர் செய்தியில் வெளியாகியுள்ளது. சரிந்து விழுந்த ராகேஷை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும், அவரைக் காப்பாற்ற இயலவில்லை.
இந்நிலையில் ராகேஷ் இறுதியாக, மெஹந்தி நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் தமது சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் பதிவிட்டது இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.
மேலும், அத்தியாயம் 1 இல் நடிக்கவிருந்த ராக்கேஷ், மெஹந்தி விழாவிற்குச் செல்வதற்கு முன்பு, மே 11-ஆம் தேதி, படத்திற்கான படப்பிடிப்பை மேற்கொண்டிருந்துள்ளார். இவரின் மரணம், கலையுலகிற்கும் நகைச்சுவை உலகிற்கும் பேரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது