Latestமலேசியா

கிளாங் லாமா தீ விபத்தில் வீடுகள் எரிந்து நாசமாகின

கோலாலம்பூர், ஜூன் 9 – இன்று அதிகாலை, ஜாலான் கிளாங் லாமாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.

இச்சம்பவம் குறித்து, செபுத்தே தீயணைப்பு நிலையத்திற்கு வந்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு மொத்தம் 27 தீயணைப்பு வீரர்கள் விரைந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுத் தலைவர் ஆர்ம்டன் மஹத் (Armdan Mahat) தெரிவித்துள்ளார்.

இந்தத் தீ, அதிகாலை 3 மணிக்குள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதென்றும் தொடர்ந்து பழுதுபார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில், உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லையென்றும் வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டது என்றும் போலீசாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!