
ஷா ஆலாம், மார்ச்-4,
குழந்தையின் பிறப்பை மறைத்த குற்றச்சாட்டில், ஒரு பெண்ணுக்கும் அவரது ஆண் நண்பருக்கும் தலா RM5,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஷா ஆலாம் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அத்தீர்ப்பை வழங்கியது.
கடந்த மாதம் பிறந்த குழந்தையின் உடலை செக்ஷன் 21-ல் உள்ள இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் புதைத்து, அந்தப் பிறப்பை மறைத்ததாக 22 வயது Nur Atisha Balqis Ismail மற்றும் 26 வயது Muhamad Razi குற்றம் சாட்டப்பட்டனர்.
இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அந்த அபராதத்தை விதித்தது.
அபராதத்தை செலுத்தத் தவறினால், 6 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என்றும் நீதிபதி அறிவித்தார்.



