
பெந்தோங், ஜூன்-22 – கெந்திங் மலையிலிருந்து இறங்கும் போது சுற்றுலா பேருந்து தடம்புரண்டு, சாலை தடுப்பு இரும்புக் கம்பியை மோதியதில், மூவர் காயமடைந்தனர்.
நேற்றிரவு 7.45 மணிக்கு ஜாலான் கெந்திங் – பெந்தோங் சாலையின் 12-ஆவது கிலோ மீட்டரில் அவ்விபத்து ஏற்பட்டது.
காயமடைந்தவர்கள் முறையே 54 வயது பேருந்து ஓட்டுநர், 74 வயது உள்ளூர் பயணி, ஒரு வெளிநாட்டுப் பயணி ஆவர் என, பெந்தோங் போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் சைஹாம் மொஹமட் கஹார் கூறினார்.
25 பயணிகளை ஏற்றிக் கொண்டு கெந்திங் மலையிலிருந்து சிலாங்கூர் செர்டாங்கிற்கு பேருந்து போய்க் கொண்டிருந்தது.
அப்போது ஒரு வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்துக்குள்ளானது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
பேருந்து ஓட்டுநரும் 2 பெண் பயணிகளும் காயத்திற்கு பெந்தோங் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்