Latestமலேசியா

சக்தி வாய்ந்த சூரியப் புயல் பூமியைத் தாக்கலாம்; நாசா எச்சரிக்கை

நியூ யோர்க், மே-21 – சூரியனின் மிகவும் தீவிரமான பகுதி விரைவில் பூமியை நோக்கி திரும்புவதால், வரும் நாட்கள் மற்றும் வாரங்களில் ​சூரியப் புயல்கள் மற்றும் பிற தீவிர விண்வெளி வானிலை நிகழ்வுகள் ஏற்படலாமென, வானியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த செயல்பாடு பூமியில் அரோராக்கள் எனப்படும் அதிர்ச்சியூட்டும் ஒளிக்காட்சிகளையும் சாத்தியமான இருட்டினையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் அதனைக் கோடிக்காட்டியது.

அண்மையில் புதிதாக உருவான சூரிய புள்ளிப் பகுதியிலிருந்து 2025-ஆம் ஆண்டின் மிக சக்திவாய்ந்த வெடிப்பை அது பதிவுச் செய்தது.

சூரியப் பிழம்புக்கு சாத்தியமான மிக உயர்ந்த வகையான X2.7 எரிப்பு என வகைப்படுத்தப்பட்ட இந்த நிகழ்வு, மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வானொலி மின்தடைகளைத் தூண்டியது.

இதனால் அதிக அதிர்வெண் கொண்ட வானொலி சமிக்ஞைகள் சுமார் 10 நிமிடங்கள் தடைபட்டன.

இந்தப் பகுதியில் இருந்து தொடர்ந்து ஏற்படும் எரிப்புகள் மற்றும் சூரிய வெடிப்புகளால், வானொலி தகவல் தொடர்புகள், மின்சார சக்தி கட்டங்கள், navigation சமிக்ஞைகள், விண்கலங்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு ஆபத்துகள் ஏற்படலாமென நாசா குறிப்பிட்டது.

சூரியன் தற்போது அதன் 11 ஆண்டு செயல்பாட்டு சுழற்சியின் உச்சத்தில் உள்ளது.

இது நட்சத்திரத்தின் காந்த துருவங்கள் புரட்டப்படுவதன் விளைவாகும்.

இதனால் அது ஒரு கட்டத்தில் புயல் நிலைக்கு மாறுகிறது.

இந்நிலையில் மே 22-ல் பிரிட்டன் மற்றும் அயர்லாந்தில் அரோராக்கள் தென்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூரிய ஒளி நிகழ்வுகளால் நாம் நேரடியாக பாதிக்கப்பட மாட்டோம் என்றாலும், அரிதான நிகழ்வுகளில் தகவல் தொடர்பு, GPS, மற்றும் மின்சாரத்தில் ஏற்படும் சிறிய இடையூறுகளுக்கு மக்கள் தயாராக இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!