
ஜெனீவா, சுவிட்ஸ்லாந்து, மே 29 – நேற்று, ஸ்விட்ஸ்லாந்து ஜெனீவா (GENEVA) நகரிலிருக்கும் ‘சுவிஸ் ஆல்ப்ஸ்’ (Swiss Alps) மலைத்தொடரிலிருக்கும் பனிப்பாறை சரிந்து விழுந்ததில், 300 பேர் வசிக்கும் ‘பிளாட்டன்’ (Blatten) கிராமம் பெருமளவில் சேதமடைந்து, ஆடவர் ஒருவர் காணாமல் போனதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பனிப்பாறை சரிந்து விழுந்து, கிராமம் தாக்கப்படும் காணொளி, சுவிட்ஸ்லாந்து ஊடகத்தில் வெளிவந்து மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
காணாமல் போன 64 வயது நபர், உள்ளூர்வாசி என்றும் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இருந்தபோதும் அந்நபர் இன்னும் கிடைக்கவில்லையென்று மீட்பு பணி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பனிப்பாறை ஏற்படுத்திய சேதத்தில் அக்கிராம மக்களுக்குக் காயங்களேதும் இல்லை என்பது அதிகாரபூர்வமாக உறுதிச் செய்யப்பட்டுள்ள நிலையில், உள்ளூர் அதிகாரிகள், தரைமட்டமான கிராமத்தை, மறுசீரமைத்து அப்பகுதி மக்களுக்கு மீட்டு தருவதாக உத்தரவாதம் தந்துள்ளனர்.