
போர்டிக்சன், பிப்ரவரி-23-சிரம்பான்–போர்டிக்சன் நெடுஞ்சாலையில் நேற்று மாலை 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்தாள்.
மாலை 6.54 மணிக்கு நிகழ்ந்த இவ்விபத்தில் PLUS அவசர உதவி லாரி, PLUS ரோந்து 4WD வாகனம் மற்றும் Honda CR V கார் மோதிக்கொண்டன.
மழை பெய்துகொண்டிருந்த நிலையில் Honda CR-V கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அப்போது அந்த PLUS லாரியும், ரோந்து வாகனமும், ஏற்கனவே தடம் புரண்ட வாகனமொன்றுவதற்கு உதவுவதற்காக அவசரப் பாதையில் இருந்தன.
அச்சிறுமி Honda CR V வாகனத்தின் முன் பயணி இருக்கையில் அமர்ந்திருந்தார்.
தலையில் கடுமையான காயம் அடைந்து, UCSI மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சிறுமி இறந்ததாக போலீஸ் தெரிவித்தது.
குழந்தையின் பெற்றோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.



