Latestமலேசியா

செகாமாட்டில் உணவகக் கழிவறையில் பெண்ணை எட்டிப் பார்த்த இளைஞன்; கைப்பேசியில் 16,000 புகைப்படங்களும் வீடியோக்களும் சிக்கின

செகாமாட், மே-15 – ஜோகூர் செகாமாட்டில் உணவகக் கழிவறையில் பெண்ணொருவரை எட்டி பார்த்து, அவரை கைப்பேசியில் பதிவுச் செய்த இளைஞன் கைதாகியுள்ளான்.

பண்டார் புத்ராவில் மே 4-ஆம் தேதி இரவு 10.40 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

செகாமாட் போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன்ட் அஹ்மாட் சாம்ரி மரின்ஸா அதனை உறுதிப்படுத்தினார்.

கழிவறையில் சந்தேகத்திற்குரிய நடமாட்டம் இருந்ததை உணர்ந்த அப்பெண், அங்கு நடப்பவை கைப்பேசியில் பதிவாகிக் கொண்டிருப்பதை கண்டுபிடித்தார்.

உடனே பதறியடித்து வெளியே ஓடியவர் போலீஸ் புகார் செய்தார்.

இந்நிலையில் மே 9-ஆம் தேதி கைதான ஆடவனை விசாரித்ததில், அவனது கைப்பேசியில் 16,000 பெண்களின் புகைப்படங்களும் வீடியோக்களும் பதிவிறக்கம் செய்யப்பட்டிருந்தன.

2 வீடியோக்கள் பெண்கள் கழிவறையில் இருக்கும் போது எடுத்தவையாகும்.

அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!