Latestமலேசியா

சைட் சாடிக்கின் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பு மேல்முறையீடு

புத்ரா ஜெயா, ஜூன் 25 – சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மானை அனைத்து ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பு கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்.

மேலும் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அரசு தரப்பு துணை வழக்கறிஞர் தம்மிடம் தெரிவித்திருப்பதாக MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி இன்று கூறினார்.

இது நீதிமன்ற முடிவாக இருப்பதால் அரசு தரப்பு கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் என தம்மிடம் கூறியிருப்பதாக MACC தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு முன் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தீரப்பை அரசு தரப்பு ஆராயும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வான் ஷஹாருடின் வான் லாடின் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!