Latestமலேசியா

டாமான்சாரா டாமாயில் ‘Lajak’ சைக்கிளோட்ட போட்டி ஏற்பாடு; போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், மே 23 – நாளை Damansara Damaiயில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள Lajak சைக்கிளோட்டப் போட்டியின் ஏற்பாடு குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அந்த சைக்கிளோட்டப் போட்டியை ஊக்குவிக்கும் காணொளியை சமூக ஊடக தளமான டிக்டோக்கில் தங்களது தரப்பு நேற்று கண்டறிந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஷாருல்நிஷாம் ஜபார் ( Shahrulnizam Jaafar ) தெரிவித்தார்.
29 வினாடிகள் கொண்ட அந்த காணொளியில் , மே 24ஆம்தேதியன்று டாமன்சாரா டாமாயில் நடைபெறவிருக்கும் சைக்கிளோட்ட போட்டியை ஏற்பாடு செய்வது தொடர்பான தகவல்களுடன், இளைஞர்கள் குழு ஒன்று சாலையில் சைக்கிள் ஓட்டுவதைக் காட்டுகிறது என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதோடு
1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 81ஆவது பிரிவின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளது. இது அனுமதியின்றி வாகனங்களை உள்ளடக்கிய போட்டியை நடத்துகிறது என்று வெளியிட்ட அறிக்கையில் Sharulnizam தெரிவித்தார். இந்த நிகழ்வைப் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள், பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் நடவடிக்கை அறைக்கு 03-79662222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள எந்த போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!