
ஜோகூர் பாரு, நவம்பர்-9, தாம் பணி ஓய்வுப் பெறவிருப்பதாக வெளியான தவல்களை ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் மறுத்துள்ளார்.
டிக் டோக்கில் வைரலான வீடியோவின் உள்ளடக்கம் அடிப்படையற்றது என்றார் அவர்.
மாநிலத்தின் பாதுகாப்பையும் பொது அமைதியையும் கட்டிக் காக்க தமக்கிடப்பட்ட பொறுப்பை, தாம் வழக்கம் போல செய்து வருவதாக டத்தோ குமார் கூறினார்.
ஒரு வேளை அது உண்மையாக இருந்தால், போலீசே அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
எனவே இது போன்ற வதந்திகளைப் பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
இவ்வாண்டு ஓய்வுப் பெற்ற மற்றும் ஓய்வுப் பெறப் போகும் மாநில போலீஸ் அதிகாரிகளுக்கு இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் டத்தோ குமார் பங்கேற்ற வீடியோ முன்னதாக வைரலாகியிருந்தது.