
சிரம்பான் – ஜூன் 13 -மாணவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் கடுமையான மீறல்களை இலக்காகக் கொண்டு மாநிலம் தழுவிய நிலையிலான பரிசோதனையின் போது, நெகிரி செம்பிலான் சாலைப் போக்குவரத்துத் துறை ஜே.பி.ஜே பதினெட்டு பள்ளி வேன்களைக் பறிமுதல் செய்தது. Ops Khas Van Haram நடவடிக்கையின்போது , அனுமதி இல்லாமல் இயங்கும் வாகனங்கள், காலாவதியான மோட்டார் வாகன உரிமங்கள், காப்புறுதி கலாவதியான மற்றும் சாலை தகுதிச் சான்றிதழ்களில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு மீறல்கள் கண்டறியப்பட்டன. காலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், முறையான அனுமதியின்றி இயங்கும் 26 வேன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் RTD இயக்குனர் ஹனிப் யூசப்ரா யூசுப் ( Hanif Yusabra Yusuf ) தெரிவித்தார்.
சட்டவிரோத வணிக நோக்கங்களுக்காக தனியார் வேன்களைப் பயன்படுத்துவது அதிகரித்து வருவது குறித்த பொதுமக்கள் புகார்கள் மற்றும் புலனாய்வுத் தகவல்களுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்வதும் அடங்கும். இதுபோன்ற நடவடிக்கைகள் சட்டத்தை மீறுவது மட்டுமல்லாமல் பயணிகளுக்கு கடுமையான பாதுகாப்பு அபாயங்களையும் ஏற்படுத்துகின்றன. சிரம்பான் , ரெம்பாவ், கோலா பிலா மற்றும் ஜெம்போல் முழுவதும் சட்டவிரோதமாக இயக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 57 வாகனங்களை அமலாக்கக் குழுக்கள் ஆய்வு செய்தன. பல்வேறு விதிமீறல்களுக்காக மொத்தம் 22 சம்மன் விநியோகிக்கப்பட்டதாக ஹனிப் தெரிவித்தார்.