
மூவார், ஜூலை 9 – கடந்த திங்கட்கிழமை Pagoவில் பல்கலைக்கழக மாணவி ஒருவரை கொள்ளையடித்துவிட்டு அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு இளைஞர்களை போலீசார் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர்.
20 வயது மதிக்கத்தக்க அப்பெண் தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துக் கொண்டிருந்தபொழுது சந்தேக நபர்கள் அவர்களை வழிமறித்து 250 ரிங்கிட் கொண்ட கைப்பையைத் பறித்தனர்.
பின்னர் அந்த இருவரும், அப்பெண்ணின் காதலனை முகத்தில் பலமாக குத்திவிட்டு, அருகிலுள்ள செம்பனைத் தோட்டத்திற்கு அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது காதலனும் அதே நாளில் Panchor காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அவ்விருவரும் கைதாகினர்.
விசாரணைக்கு உதவுவதற்காக அந்த 2 பேரையும் 5 நாட்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.