
கோலாத் திரெங்கானு, ஜூன் 25 – பாலியல் உறவு, உடல் ரீதியான பாலியல் வன்கொடுமை மற்றும் தனது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 13 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர், பள்ளியின் முன்னாள் முதல்வருக்கு இன்று Kuala Terengganu செஷன்ஸ் நீதிமன்றத்தில் 107 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட 60 வயதுடைய ரோஸ்லி அப்துல் ரஹ்மான் தன் மீதான குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகத்தை எழுப்பத் தவறியதைத் தொடர்ந்து அவருக்கு இந்த தண்டனையை விதிப்பதாக நீதிபதி Mohd Zul Zakiqudin Zulkifli தீர்ப்பளித்தார். சம்பவம் நடந்த போது 16 வயது மற்றும் எட்டு மாத பிள்ளையாக இருந்த பாதிக்கப்பட்ட மாணவியுடன் பாலியல் உறவு கொண்டதாக ரோஸ்லி மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
அனைத்து குற்றங்களும் 2020ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கிடையே கோலாத் திரெங்கானு மாவட்டத்திலும் மாராங்கைச் சுற்றியும் நடந்துள்ளன. தண்டனைச் சட்டத்தின் 376 பிரிவு (2) (f) இன் கீழ் ஐந்து குற்றச்சாட்டுக்களையும் , சிறார்களுக்கு எதிரான 2017 ஆம் ஆண்டின் பாலியல் குற்றங்கள் சட்டம் 14 ஆவது (a) பிரிவின் கீழ் நான்கு குற்றச்சாட்டுக்ளையும் இந்த குற்றத்திற்காக, குற்றம் சாட்டப்பட்டவர் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (2) (f) இன் கீழ் ஐந்து குற்றச்சாட்டுகளையும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் (SOCA) 2017 இன் பிரிவு 14 (a) இன் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளையும் எதிர்நோக்கியிருந்தார்.
2017 ஆம் ஆண்டின் சிறார் குற்றத்தின் பிரிவு 11 (1) (a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனையும், பிரிவு 14 (a), 14 (c) மற்றும் 14 (d) இன் கீழ் குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நீதிமன்றம் விதித்தது.
பிரிவு 376 (2) (f) இன் கீழ் ஒவ்வொரு குற்றத்திற்கும் ரோஸ்லிக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அனைத்து சிறைத்தண்டனைகளும் இன்று முதல் அமலுக்கு வந்தபோதிலும் ஏகாகாலத்தில் தண்டனை நிறைவேற்றப்படுவதால் அவர் 15 ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனையை அனுபவிப்பார்.
மேல்முறையீடு முடிவு தெரியும்வரை குற்றம் சாட்டப்பட்டவரின் தண்டனையை நிறுத்தி வைக்கவும், ஜாமீனை 40,000 ரிங்கிட் அதிகரிக்கவும் நீதிமன்றம் அனுமதித்தது.