Latestமலேசியா

பிணைப்பணத்திற்காக ஆள் கடத்தலில் ஈடுபட்ட கும்பலை 24 மணி நேரங்களில் முறியடித்த ஜோகூர் போலீஸ்

ஜோகூர் பாரு, ஜூன்-2 – பிணைப் பணம் கோருவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆள்கடத்தலை ஜோகூர் போலீஸ் 24 மணி நேரங்களில் முறியடித்துள்ளது

தனது நண்பர் கடத்தப்பட்டதாக 46 வயது வெளிநாட்டு ஆடவர் முன்னதாக போலீஸில் புகார் செய்தார்.

கணவரை விடுவிக்க கடத்தல்காரர்கள் 20,000 ரிங்கிட் பிணைப் பணம் கோருவதாக நண்பரின் மனைவி தம்மிடம் கூறியதாக அவ்வாடவர் அப்புகாரில் தெரிவித்தார்.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸ், கூலாயிலும் குளுவாங், சிம்பாங் ரெங்கத்தில் மே 28-ஆம் தேதி 5 ஆடவர்களைக் கைதுச் செய்தது.

22 முதல் 48 வயதிலான அந்த ஐவரில் ஒருவர் உள்ளூர்வாசி; நால்வர் வெளிநாட்டவர்கள் ஆவர்.

அவர்களிடமிருந்து பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

எனினும், அது குறித்தும் அவர்களின் அடையாளம் குறித்தும் மேற்கொண்டு கருத்துரைக்க போலீஸ் மறுத்து விட்டது.

ஐவரும் 6 நாட்களுக்கு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட ஆடவர் மே 29-ஆம் தேதி கூலாயில் பாதுகாப்பாக மீட்கப்பட்து குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!