
பிரதமரின் பதவி காலத்தை அதிகபட்சம் 10-ஆண்டுகளுக்கு கட்டுப்படுத்த வகை செய்யும் அரசியலமைப்பு மாற்றத்திற்கு மக்களவையில் கொண்டு வரப்பட்ட சட்ட மசோதா நிறைவேற்றப்படாமல் தோல்வி கண்டது.
அரசியலமைப்பு சட்ட திருத்தத்திற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்பை வாக்குககள் கிடைக்காததே அதற்குக் காரணம்.
அந்த மசோதாவுக்கு ஆதரவாக 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில் 44 பேர் வாக்களிப்பலிருந்து ஒதுங்கிக் கொண்டனர், 33 பேர் அவைக்கு வரவில்லை.



