Latestமலேசியா

பிறந்தவுடன் மாற்றப்பட்டார்: ஜப்பானிய லாரி டிரைவர் 60 ஆண்டுகள் கழித்து கோடீஸ்வரக் குடும்பத்தின் வாரிசு ஆன கதை

தோக்யோ, அக்டோபர்-28,

ஜப்பானில், வறுமையில் வளர்ந்த 60 வயது லாரி டிரைவர் ஒருவர், பிறந்தபோதே மாற்றப்பட்டவர் என நீதிமன்றம் உறுதிப்படுத்தியதால், அவரின் வாழ்க்கையில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அவர் பிறந்தது உண்மையில் பெரும் பணக்காரக் குடும்பத்தில் என மரபணு பரிசோதனை உறுதிச் செய்ததே அதற்குக் காரணம்.

வறுமையில் வாழ்ந்த லாரி டிரைவர் தான் அந்த குடும்பத்தின் உண்மையான வாரிசு என நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட்டது.

அதாவது 1953-ஆம் ஆண்டு தோக்யோவில் உள்ள மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள் தவறாக மாற்றப்பட்டன.

அதில் பணக்கார வீட்டுப் பிள்ளை ஏழைக் குடும்பத்தின் கைகளுக்குச் சென்றுள்ளது.

இந்த உண்மை தெரிய வந்தபோதே, மருத்துவமனையிடம் இழப்பீடு கோரி அவர் வழக்குத் தொடுத்தார்.

இந்நிலையில் “தனக்குரிய வாழ்க்கையிலிருந்து நியாயமற்ற வகையில் விலக்கப்பட்டார்” எனக் கூறி, அந்த லாரி ஓட்டுருக்கு சுமார் 1.05 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்க நீதிமன்றமும் உத்தரவிட்டது.

அவரின் சொந்தப் பெற்றோர் இருவரும் இப்போது உயிரோடு இல்லாவிட்டாலும், இத்தீர்ப்பு மனிதத் தவறால் ஏற்பட்ட வாழ்நாள் இழப்புக்கு கிடைத்த நியாயமான நிவாரணமாகக் கருதப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!