Latestமலேசியா

புலாவ் பெர்ஹெந்தியான் கடலில் மூழ்கி சீன பெண்மணி மரணம்

பெசுட், ஜூன் 6 – மலேசியாவிற்குச் சுற்றுலா பயணம் மேற்கொண்ட, சீனாவைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் புலாவ் பெர்ஹெந்தியான் கடலில் மூழ்கி இறந்துள்ளார். இச்சம்பவம் ஜூன் 3ஆம் திகதி நிகழ்ந்துள்ளது.

கடற்கரைக்கு உறவினர்களுடன் வந்த அப்பெண், கடலில் தனியாக நீந்த சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் கரைக்கு திரும்பவில்லை. சற்று நேரத்தில் அவரது உடல் கடலில் மிதந்துக் கொண்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக பெசுட் மாவட்ட காவல்துறை தலைவர் அசாமுடின் அஹ்மட் (Azamuddin Ahmad) கூறினார்.

கடலில் மூழ்கி அவர் இறந்ததை பிரேத பரிசோதனைக்கு பிறகு மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதனிடையே பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லும்போது கவனத்துடன் இருக்க வேண்டுமென்று காவல்துறையினர் அறிவுறுத்தயுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!