Latestமலேசியா

பெண்ணுக்கு ஆபாச செய்தி அனுப்பியக் குற்றச்சாட்டை மறுத்த வங்கிப் பணியாளர்

ஈப்போ, அக்டோபர்-4, மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணுக்கு WhatsApp வாயிலாக ஆபாச செய்தி அனுப்பியதாக, வங்கிப் பணியாளர் மீது ஈப்போ மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டது.

எனினும் 52 வயது Rosman Jamaluddin, தம் மீதான இரு குற்றச்சாட்டுகளையும் மறுத்து விசாரணைக் கோரினார்.

2021 மே மாதம் ஒரு தடவையும், பின்னர் ஆகஸ்ட் மாதம் ஒரு முறையுமென, 38 வயது பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

இரு குற்றச்சாட்டுகளுக்கும் 2,500 ரிங்கிட் தொகையில் அவரை ஜாமீனில் விடுவித்த நீதிமன்றம், நவம்பர் 25-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வரும் வரை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாதென்ற கூடுதல் நிபந்தனையும் விதித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!