Latestமலேசியா

மக்களுக்கு இறைச்சி விநியோகத்திற்காக யானைகளை ஜிம்பாப்வே திட்டம்

ஹராரே, ஜூன் 4 – Zimbabweவில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் , dozen கணக்கான யானைகளைக் கொன்று, அதன் இறைச்சியை மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று அந்நாட்டின் வனவிலங்கு ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்க வட்டாரத்தில் போட்ஸ்வானாவிற்குப் (Botswana) பிறகு உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையைக் கொண்ட நாடாக Zimbabwe விளங்குகிறது.

நாட்டில் தென்கிழக்கில் உள்ள ஒரு பரந்த தனியார் விளையாட்டு காப்பகத்தில் தொடக்கக் கட்டமாக 50 யானைகளை கொல்லப்படுவது இலக்காகக் கொண்டிருக்கும் என்று Zimbabwe பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு ஆணையமான Zim Parks வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

எனினும் மொத்தம் எத்தனை யானைகள் கொல்லப்படும் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

யானை இறைச்சி உள்ளூர் சமூகங்களுக்கு விநியோகிக்கப்படும் என்பதோடு அவற்றின் தந்தங்கள் அரசு சொத்தாக இருக்கும், அவை பாதுகாப்பிற்காக Zim Parkஸிடம் ஒப்படைக்கப்படும் என்று அது கூறப்பட்டது.

யானை தந்தங்கள் வர்த்தகத்திற்கு உலகளாவிய தடை விதிக்கப்பட்டுள்ளதால், Zimbabwe தனது தந்தங்களின் கையிருப்பை விற்க முடியவில்லை.

தலைநகர் Harareயில் 230 கிலோவிற்கும் அதிகமான தந்தங்களுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தந்தங்களை வாங்குபவர்களை தேடும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!