
லுமுட், மே 26 – எட்டு உணவு வளாகங்கள் மோசமான சுகாதாரத் தரநிலைகளை கொண்டிருந்தது உட்பட பல்வேறு குற்றங்களுக்காக, மொத்தம் 7,000 ரிங்கிட் மதிப்புள்ள 28 குற்றப் பதிவு சம்மன்களை
மஞ்சோங் நகரான்மைக் கழகம் வழங்கியுள்ளது. உரிமம் மற்றும் அமலாக்கத் துறையின் கீழ் உள்ள மாவட்ட மன்றத்தின் உணவு வளாகங்கள் மற்றும் அங்காடிப் பிரிவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக Manjung நரான்மைக் கழகத்தின் தலைவர்
Muhammad Faizal Shah Shafian Suri தெரிவித்தார்.
மஞ்சோங் நரான்மைக் கழகத்தின் நிர்வாகப் பகுதியிலுள்ள
17 உணவு மையங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
ஊராட்சி மன்ற அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் மேசைகளை வைத்ததும், வணிக உரிமங்களை புதுப்பிக்கத் தவறியதும் கண்டறியப்பட்ட குற்றங்களில் அடங்கும் என்று கூறப்பட்டது.