Latestமலேசியா

மலாக்கா இடைநிலைப்பள்ளியில் தீ விபத்து; ஆசிரியர் அறைகள், நிர்வாக அலுவலகம் தீயில் எரிந்தன

ஜாஸின், ஜூலை 3 – இன்று அதிகாலை, மெர்லிமாவ்விலுள்ள ‘டாங் அனும்’ இடைநிலைப்பள்ளியில் (SMK Dang Anum) ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு ஆசிரியர் அறைகள் மற்றும் பள்ளி நிர்வாக அலுவலகம் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்தத் தீ விபத்தில் பொருட்சேதம் மட்டுமே ஏற்பட்டது என்றும் மாறாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் மெர்லிமா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டுத் தளபதி முகமட் சுகூர் முகமட் அலி கூறியுள்ளார்.

தகவல் கிடைத்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த 19 தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும் தீயணைப்பு முயற்சிகள் இன்னும் நடந்து வருவதோடு இவ்விபத்திற்கான காரணம் குறித்த விசாரணைத் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது..

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!