Latestமலேசியா

மலேசிய கருப்புப் பணத்தைப் ‘பாதுகாப்பாகப்’ பதுக்கி வைக்க ஒரு மேற்காசிய நாடே முக்கியத் தேர்வு ; MACC அம்பலம்

புத்ராஜெயா, ஜனவரி-17 – கணக்கில் வராத ‘கருப்புப் பணத்தை’ ஒரு மேற்காசிய நாட்டில் பாதுகாப்பாக மலேசியர்கள் பதுக்கி வைத்திருப்பதை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அம்பலப்படுத்தியுள்ளது.

ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சில நபர்கள், சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட
தங்களின் கருப்புப் பணத்தை சம்பந்தப்பட்ட வெளிநாட்டுக்கு மாற்றி, அந்த நாட்டின் வங்கி மற்றும் சொத்து முதலீட்டு அமைப்புகளை பயன்படுத்தி
பண சுத்திகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக, சொத்து வாங்குதல் மற்றும் இரகசிய நிதி பரிவர்த்தனைகள் மூலம் சட்டவிரோத பணம் மறைக்கப்படுவதாக, MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

கேள்விக்குரியதாக இருந்தாலும் வெளிநாட்டிலிருந்து வரும் நிதியை ஏற்றுக் கொள்வதற்கான அதன் ‘திறந்த மனப்பான்மை’ உட்பட, பணமோசடியின் மையமாக விளங்குவதால் அந்த மேற்காசிய நாடு பலரது தேர்வாக உள்ளது.

இந்நிலையில்,
அந்த பணத்தை கண்டறிந்து மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

என்றாலும் இதற்கு அனைத்துலக அளவில் வலுவான ஒத்துழைப்பு தேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.

சட்டவிரோத பணம் தொடர்பான இந்த அனைத்துலக சவால்,
மலேசிய சட்ட அமுலாக்க நிறுவனங்களுக்கு
புதிய சிக்கல்களை உருவாக்கி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!