
ஜோர்ஜ்டவுன், மே-27 – பினாங்கு, ஜெலுத்தோங், தாமான் கிரீன் வியூவில் நேற்று மூதாட்டியின் தங்கச் சங்கிலியைப் பறித்த ஆடவன், 24 மணி நேரங்களில் கைதானான்.
தீமோர் லாவோட் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் அப்துல் ரொசாக் முஹமட் அதனை உறுதிப்படுத்தினார்.
பிற்பகல் 3.30 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து 1 மணி நேரத்தில் 71 வயது மூதாட்டி புகார் செய்தார்.
இதையடுத்து 29 வயது சந்தேக நபர் இன்று அதிகாலை 4 மணிக்கு கைதுச் செய்யப்பட்டான்.
நேற்று ஜாலான் தெம்பாகாவில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அம்மூதாட்டியின் தங்கச் சங்கிலியை, இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்தவன் பட்டென பறித்தான்.
பறித்தவன் மோட்டார் சைக்கிளோடு சாலையில் விழுந்தான்.
மூதாட்டி காலணியால் அடிக்க, அவன் தன்னைத் தற்காத்துக் கொள்ள முயல்வது, முன்னதாக வைரலான 11 வினாடியில் தெரிந்தது.
சம்பவத்தின் போது போதைப் பொருள் உட்கொண்டிருந்த அவ்வாடவன் 7 நாட்களுக்கு விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டான்.