Latestமலேசியா

லாரியிலிருந்து கழன்றோடி சாலையோரம் நின்றிருந்த ஆடவரை மோதி காயம் விளைவித்த டயர்

யான், ஜனவரி-21, கெடா, யானில் லாரியிலிருந்து கழன்று உருண்டோடிய டயர் மோதி, ஓர் ஆடவர் காலிலும் தொடையிலும் காயமடைந்தார்.

சுங்கை டாவுன், சிம்பாங் குவாலாவில் நேற்று மதியம் 1 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.

நெல் உமிகளை ஏற்றியிருந்த லாரியிலிருந்து திடீரென கழன்ற டயர் உருண்டோடி, சாலையோரமாக Proton Iswara காரின் பின்னால் நின்றிருந்த அந்நபரை மோதியிருக்கிறது.

வேகமாக வந்த டயரை தடுப்பதற்குள் அல்லது தவிர்ப்பதற்குள், அது அவர் மீது மோதி விட்டது போலீஸாரின் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

45 வயது அவ்வாடவர் தற்போது சுங்கை பட்டாணி, சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இவ்வேளையில் லாரி ஓட்டுநருக்கு அதில் காயமேதும் ஏப்படவில்லை.

என்றாலும் விசாரணைக்காக அவர் கைதானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!