
ஆகஸ்ட்-24-ஐரோப்பாவில் நடைபெற்று வரும் மிச்செலின் லீ மேன்ஸ் கிண்ண (Michelin Le Mans Cup) கார் பந்தயத்தின் போது, நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் அஜித் குமார் ஓட்டிச் சென்ற சிவப்பு-வெள்ளை நிற ரேசிங் கார் ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு காருடன் மோதி சுழன்றது. எனினும் அவ்விபத்தில் நடிகர் அஜித் குமார் காயம் ஏதும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அஜித் குமார் நவீன பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருந்ததால், பந்தயத் தளத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறினார். இதற்கு முன் இத்தாலி, ஸ்பெயின், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் நடந்த பந்தயங்கள் மற்றும் பயிற்சிகளின் போது அஜித் குமார் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியிருக்கிறது. அவற்றில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், நடிகர் அஜித் குமாரின் கார் விபத்துக்குள்ளான தகவல், அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அவருக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை என்பது ரசிகர்களுக்கு சற்று மன ஆறுதல் தரும் செய்தியாக அமைந்துள்ளது.



