
புத்ரா ஜெயா, ஜூன் 19 – ஜூலை 1 ஆம்தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் விரிவாக்கப்பட்ட விற்பனை மற்றும் சேவை வரி இறக்குமதி செய்யப்பட்ட பொருட்ளுக்கு நீட்டிக்கப்படுவதால், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் Avocado எனப்படும் வெண்ணெய் பழங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நடவடிக்கை உள்ளூர்Avocado பழங்களின் விலைகளை உறுதிப்படுத்த உதவும் என சபா Avocado பழ விவசாயிகள் சங்கத்தின் ஆலோசகரான ஜமாவி ஜாபர்
( Jamawi Jaafar ) தெரிவித்தார்.
அவை இறக்குமதி செய்யப்பட்ட பழங்களின் தரத்துடன் ஒப்பிட்டபோதிலும் பெரிய மாற்றத்தை கொண்டிருக்கவில்லை.
உள்ளூர் சந்தையில் விலைகள் மேம்பட்டால், அதிகமான உள்ளூர் விவசாயிகள் Avocado பழ விவசாயத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று முன்னாள் கெமாபோங் சட்டமன்ற உறுப்பினரான Jamawi Jaafar கூறினார்.
தற்போது உள்நாட்டு சந்தைக்கான Avocado பழங்களில் 85 விழுக்காடு இறக்குமதி செய்யப்படுகின்றன. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் இந்த பழங்களின் விலை குறைவாக இருப்பதால் நாம் இன்னமும் போட்டியிட முடியும் என அவர் தெரிவித்தார்.
சபாவில் 5,000 ஏக்கரில் Avocado பழங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.