
புத்ரா ஜெயா, ஜன 6 – நஜிப் ரசாக் (Najib Razak) தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கும் துணை உத்தரவு இருப்பதை நிரூபிப்பதற்காக நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க அனுமதி பெற்றுள்ளார்.
மூன்று பேர் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் நஜீப்பிற்கு ஆதரவாக இந்த தீர்ப்பை வழங்கினர்.
அதோடு உயர்நீதிமன்றத்தில் வழக்கின் தகுதியை விசாரிக்கும் போது புதிய ஆதாரங்களைச் சேர்க்க முன்னாள் பிரதமரின் விண்ணப்பத்தையும் இன்று மேல் முறையீட்டு நீதிமன்றம் அனுமதித்தது.
புதிய ஆதாரங்களை சமர்ப்பிப்பதற்கு லாட் & மார்ஷலில் (Ladd & Marshall) உள்ள நிபந்தனைகளை நஜிப் பூர்த்தி செய்துள்ளார் என்று நீதிபதி ஃபிரூஸ் ஜாஃப்ரில் (Firuz Jaffril) தீர்ப்பளித்தார்.