
கங்கார், பெர்லிஸ், ஜூன் 6 – பெர்லிஸ் மாநிலத்தில் தங்கள் சூதாட்ட வணிகத்தை மீண்டும் தொடங்குவதற்கு, மலேசிய ‘ஸ்போர்ட்ஸ் டோட்டோ’ மற்றும் இன்னும் 4 நபர்கள் கோரிய விண்ணப்பத்தை கங்கார் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பெரிக்காத்தான் நேஷனல் தலைமையிலான மாநில அரசு எடுத்த இம்முடிவை, விண்ணப்பதாரர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிதுள்ளது என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் வணிக வளாக உரிமத்தை புதுப்பிக்க மறுத்த கங்கார் ஊராட்சி மன்றத்தின் (MPK) முடிவு ஊராட்சி சட்டத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்பதனால் நீதிமன்றம் அவர்களின் தாக்கல் மனுவை நிராகரித்துள்ளது.
இந்நிலையில், விண்ணப்பதாரரின் மேல்முறையீடு ஜூன் 16-ஆம் தேதி அன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிடப்பட்டுள்ளது..