Latestமலேசியா

கலகத் தடுப்பு போலீஸ்காரர்கள் சம்பந்தப்பட்ட விபத்து லோரி ஓட்டுநர் 4 நாள் தடுத்து வைப்பு

தெலுக் இந்தான், மே 14 – FRU எனப்படும் கலகத் தடுப்பு போலீஸ்காரர்களில் 9 பேர் உயிரிழப்புக்கு காரணமான விபத்து சம்பந்தப்பட்ட லோரி ஓட்டுநர் இன்று முதல் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் டாக்டர் பக்ரி ஜைனல் அபிடின்
( Bakri Zainal Abidin ) இன்று விண்ணப்பித்ததைத் தொடர்ந்து, 45 வயதான சந்தேக நபருக்கு எதிரான தடுப்புக்காவல் உத்தரவை மாஜிஸ்திரேட் நைடத்துல் அதிரா அஸ்மான்
(Naidatul Athirah Azman ) பிறப்பித்தார். மனித அலட்சியம், தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு விசாரணை தொடரப்படும்.

சம்பவத்திற்கு முன்னும் பின்னும் விபத்தை பார்த்த பொதுமக்களை சமூக ஊடகங்கள் மூலம் தாம் கண்காணித்திருப்பதால் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களை வழங்க உதவுமாறு, குறிப்பாக ஹிலிர் பேராக் சமூகத்திடம் பக்ரி கேட்டுக்கொண்டார்.

அதே நேரத்தில், சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் 017-8211326 என்ற எண்ணில் தன்னைத் தொடர்பு கொள்வதன் மூலமோ அல்லது ஹிலிர் பேராக் போலீஸ் தலைமையகத்தை தொடர்பு கொள்வதன் மூலமோ விசாரணைக்கு உதவ முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

வாகனப் பாதுகாப்பு மற்றும் சாலை நிலைமைகளின் அம்சங்களை ஆய்வு செய்ய PUSPAKOM, சாலைப் போக்குவரத்துத் துறை , தீயணைப்பு, மீட்புத் துறை , பொதுப்பணித் துறை போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் விசாரணைகளை மேற்கொள்ளும். லோரியை வைத்திருக்கும் நிறுவனமும் விரைவில் வாக்குமூலம் அளிப்பதற்கு அழைக்கப்படும் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!