கோலாலம்பூர், டிச 16 – புதன்கிழமை மோட்டார் சைக்கிளில் மோதி காயம் அடைந்ததாக நம்பப்படும் மேகமூட்ட வர்ணத்தைக் கொண்ட சிறுத்தையை சிலாங்கூர் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை வெற்றிகரமாக மீட்டது.
இச்சம்பவம் குறித்து செமேன்யே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டதாக சிலாங்கூர் வனவிலங்கு பூங்காத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தது.
30 கிலோ எடையுள்ள அந்த பெண் சிறுத்தை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் வனவிலங்கு துறையினர் வெற்றிகரமாக மீட்டனர். அந்த சிறுத்தையின் உடல் பகுதியிலும் அதன் தாடையிலும் காயம் இருந்தது.
மேலும், அந்த விலங்கு போக்குவரத்துக் கூண்டில் வைக்கப்பட்டு, சிகிச்சைக்காக பேராக், சுங்காயிலுள்ள உள்ள தேசிய வனவிலங்கு மீட்பு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.