
கோலா லங்காட், ஜூன் 26 – நேற்று, தெலோக் டத்தோக் பாலம் அருகேயுள்ள ஜாலான் கிள்ளாங் – பந்திங் – போர்ட்டிக்சனின் கிலோமீட்டர் 32 இல், பந்திங் தொழிற்கல்வி கல்லூரி மாணவர் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் லாரியுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் துறந்துள்ளார்.
17 வயது இளைஞர் பந்திங்கிலுள்ள தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததென்று கோலா லங்காட் மாவட்ட காவல்துறைத் தலைவர், முகமட் அக்மல்ரிசல் ரட்ஸி கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் கட்டுப்பாட்டை இழந்து வலது பாதையில் விழுந்ததாகவும், பின்னர், 50 வயது மதிக்கத்தக்க நபர் ஓட்டி வந்த லாரி அவர் மீது மோதி, மோட்டார் சைக்கிள் கனரக வாகனத்தின் கீழ் நுழைந்து நசுங்கியதென்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லாரியின் பின்புற சக்கரம் மோதியதால் பாதிக்கப்பட்டவரின் தலையில் காயம் ஏற்பட்டதாகவும், அவரைப் பந்திங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் தகவல் தெரிந்த பொதுமக்கள் காவல்துறையினரை தொடர்புகொள்ள வேண்டுமென்று அக்மல்ரிச