Latestமலேசியா

சம்ரி வினோத் மீதான தாக்குதல்; நால்வர் சரண், 2-நாள் தடுப்புக் காவல்

புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-10-பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில், சுயேட்சை சமய சொற்பொழிவாளர் சம்ரி வினோத் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக, நால்வர் இன்று காலை போலீஸில் சரணடைந்தனர்.

20 முதல் 30 வயது வரையிலான அந்நால்வரில் இருவர் பொறியியலாளர்கள் ஆவர்; ஒருவர் தொழில்நுட்பப் பணியாளர், மற்றொருவர் வேன் ஓட்டுநர்.

இதையடுத்து, புக்கிட் மெர்தாஜாம் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் அவர்களை 2 நாட்களுக்குத் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

இதன் மூலம், இவ்வழக்கில் கைதுச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே இரு சகோதரர்கள் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!