Latestமலேசியா

சிறார் தடுப்பூசிகளும் கர்ப்பிணி பெண்களின் paracetamol பயன்பாடும் ஆட்டிசத்துக்குக் காரணமா?; சுகாதார அமைச்சு மறுப்பு

கோலாலம்பூர், செப்டம்பர்-26,

சிறார் தடுப்பூசிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் paracetamol பயன்படுத்துவது, நரம்பியல் வளர்ச்சிக் குறைப்பாடான ஆட்டிசத்திற்கு காரணமென கூறப்படுவதை, சுகாதார அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

உலக சுகாதார நிறுவனமான WHO-வே தடுப்பூசிகள் ஆட்டிசத்துக்கு காரணமல்ல என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக, சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ Dr. Mahathar Abd Wahab தெரிவித்தார்.

கடந்த 50 ஆண்டுகளில் தடுப்பூசிகள் உலகளவில் 15 கோடியே 40 லட்சம் உயிர்களை காப்பாற்றியுள்ளன; அதோடு, 30-க்கும் மேற்பட்ட தொற்றுநோய்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர் என்றார் அவர்.

கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின் கீழ் paracetamol எடுத்துக்கொள்ளலாம்; இதனால் ஆட்டிசம் ஏற்படுவதற்கு எந்த வலுவான ஆதாரமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

இவ்வேளையில், folinic acid மருந்து ஆட்டிசத்தை குணப்படுத்துமென்ற கூற்றுகளும் அறிவியல் ஆதாரமற்றவை; அதை நிரூபிக்க பெரிய அளவிலான ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.

எனவே அறிவியல் ஆதாரற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பாதுகாப்பான மருந்துகள் மற்றும் தடுப்பூசி கண்காணிப்பில் அமைச்சு தொடர்ந்து உறுதியாக இருப்பதாகவும் Mahathar அறிக்கையில் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!