Latestமலேசியா

சிலாங்கூரில் சிறுவன் ஆற்றில் தவறி விழுந்து மாயம்; தொடரும் தீவிர தேடுதல் பணி

சுபாங் ஜெயா, ஆகஸ்ட்-11 – நேற்று பெர்சியாரான் சுபாங் இண்டா ( Persiaran Subang Indah) பகுதியிலிருக்கும் பேரங்காடிக்கருகே, நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஆற்றில் தவறி விழுந்த 7 வயது இந்தோனேசிய சிறுவன், நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து நேற்றிரவு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு (JBPM) தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சுபாங் ஜெயா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 9 வீரர்கள், நீரில் மீட்புப் பணி குழுவினரின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு படகுகள், தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் பயன்படுத்தப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!