Latestமலேசியா

பென்சில் பெட்டி வீசப்பட்டதால் மாணவர் காயம் அடைந்தாரா போலீஸ் மறுப்பு

பெசுட் – மே 23 – பெசுட் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி மாணவர் மீது ஆசிரியர் பென்சில் பெட்டியை வீசியதால் தலையில் காயம் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலை போலீசார் மறுத்தனர். மேசையில் இடித்துக்கொண்டதால்
அந்த மாணவர் காயம் அடைந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக பெசுட் மாவட்ட போலீஸ்தலைவர் சூப்ரிடண்ட் அஷாமுடின் அகமட்@ அபு தெரிவித்தார். இந்த விவகாரம் மாணவனின் தவறான புரிதல் மற்றும் தவறு காரணமாக உருவானது. அந்த மாணவர் கீழே விழுந்ததால் காயமடைந்தார். வியாழக்கிழமை மாணவரின் குடும்பத்தினர், பள்ளி மற்றும் பெசுட் மாவட்ட கல்வி அலுவலகம் இடையே நடைபெற்ற சந்திப்பிற்குப் பிறகு இந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டது.

மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இரு தரப்பினருக்கும் இடையே தவறான புரிதல் இருப்பது கண்டறியப்பட்டது. மாணவரின் குடும்பத்தினரால் தாக்கல் செய்யப்பட்ட போலீஸ் புகாரும் திரும்பப் பெறப்பட்டது
முன்னதாக, மாணவரின் பெற்றோர் மற்றும் இன்ஸ்டாகிராம் capriozedaddycap வழியாகப் பகிரப்பட்ட பின்னர், அந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலானது. இருப்பினும், அது தொடர்புடைய அனைத்து வீடியோக்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன, மேலும் அந்த மாணவனின் பெற்றோரும் மன்னிப்பு கேட்டுள்ளனர் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!