
இந்தியா, மே 26 – உலக பொருளாதார பட்டியலில், ஜப்பானை முந்தி இந்தியா 4வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில் வருகின்ற மூன்றாண்டுகளில் ஜெர்மனியை முந்தி மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று ‘NITI Aayog’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதி (IMF), 2025 ஆம் ஆண்டில் இந்தியாவை உலகின் 4வது பெரிய பொருளாதாரமாக மாற்றும் என்று நம்பப்படுகின்றது.
இந்த விரைவான வளர்ச்சி 2028 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பன்மடங்காக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் பொருளாதாரம் வீழ்சியடையுமென்றும், சீனா அமெரிக்கா போன்ற நாடுகளின் பொருளாதாரம் உயர்வுக்கணும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது