Latestமலேசியா

பாசீர் கூடாங்கில் தந்தை ஓட்டிய லாரி தீ பிடித்ததில் 4 வயது மகன் உயிரிழப்பு

பாசீர் கூடாங், மார்ச்-28-ஜோகூர், பாசீர் கூடாங்கில் தந்தை ஓட்டிச் சென்ற லாரி நேற்று காலை தீ பிடித்ததில் 4 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தான்.

காலை 10.46 மணிக்கு, Iskandar Halal Park-கிற்கு அருகே ஒரு லாரி தீப்பிடித்ததாகத் தீயணைப்பு-மீட்புத் துறைக்குத் தகவல் கிடைத்தது.

சில நிமிடங்களில் 6 பேர் கொண்ட குழு சம்பவ இடம் விரைந்தது.

அப்போதே லாரியின் முன்பகுதி 60 விழுக்காடு தீயில் அழிந்துபோயிருந்தது.

அங்கிருந்த பொது மக்கள், 6 தீயணைப்புக் கருவிகள் மற்றும் மண்வாரி இயந்திரம் மூலம் மணலை வீசி தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் தீ வேகமாகப் பரவியது.

லாரியில் இருந்த தந்தை உயிருடன் தப்பினார்; ஆனால், மகன் உள்ளேயே சிக்கிக் கொண்டு உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியது.

தீயணைப்பு வீரர்கள் மதியம் 1.30 மணி வரை போராடி தீயை முழுமையாக அணைத்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!