Latestமலேசியா

தேசிய கொடியில் ஏற்படும் தவறுகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்க பாஸ் ஆதரவு

ஷா அலாம், மே 17 – Jalur Gemilang எனப்படும் தேசிய கொடி விவகாரத்தில் நடைபெறும் எந்தவொரு தவறு மற்றும் அலட்சியக் போக்கில் சட்டத்திற்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பாஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற தவறுகள் மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை அவசியம் தேவையாகும் என பாஸ் கட்சியின் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ தகியுடின் ஹசான் ( Takiyuddin Hassan ) தெரிவித்திருக்கிறார்.

கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாமல் மன்னிப்பை மட்டும் ஏற்றுக்கொள்வது இதுபோன்ற தவறுகளுக்கு தீர்வாக அமையாது என அவர் கூறினார். நாட்டின் அடையாளச் சின்னங்களில் அனைத்து தரப்பினரும் மரியாதையை கொண்டிருக்க வேண்டும் என்பதோடு எந்த வேளையிலும் அவற்றை மதிக்க வேண்டும்.

நமது தேச பக்தி மற்றும் விசுவாசத்திற்கு அடையாளமாக தேசிய சின்னங்கள் திகழ்வதால் அதற்கு எப்போதும் மரியாதை கொண்டிருப்பது அவசியமாகும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் Takiyuddin வலியுறுத்தினார்.

முழு எண்ணிக்கையிலான முனைகள் இல்லாமல் Jalur Gemilang நட்சத்திரத்தைக் கொண்ட TMT 2025 பேரணி சின்னம் சுற்றியிருந்த சர்ச்சையைத் தொடர்ந்து, அந்நடவடிக்கைக்காக
திரெங்கானு பாஸ் இதற்கு முன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!