Latestமலேசியா

பிளாஸ்டிக் கொள்கலனில் பூனைக்குட்டி; சிங்கப்பூர் விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் எச்சரிக்கை

சிங்கப்பூர், ஜூன் 25 — கடந்த திங்களன்று, துவாஸிலுள்ள உணவகம் ஒன்றில் பூனைக்குட்டியைப் பிளாஸ்டிக் கொள்கலனில் அடைத்து வைத்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து, அக்குற்றம் புரிந்த ஆடவனுக்கு சிங்கப்பூர் விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் (SPCA) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சக ஊழியரின் புகாரைத் தொடர்ந்து , SPCA தனது அதிரடி பரிசோதனையை மேற்கொண்ட நிலையில் கொள்கலனில் அடைபட்டிருந்த பூனை விடுவிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆடவருக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து விலங்குகள் வதை தொடர்பான எந்தவொரு வழக்குகளையும் அதிகாரிகளிடம் புகாரளிக்க பொதுமக்கள் தயங்க வேண்டாமென்று SPCA வலியுறுத்தியுள்ளது.

சிங்கப்பூரின் விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டத்தின் கீழ், விலங்கு துன்புறுத்தலுக்கு 18 மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் 15,000 சிங்கப்பூர் டாலர் வரை அபராதம் விதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!