
பெய்ஜிங், ஜூன்-1 – சீனாவின் உலகப் புகழ்பெற்ற டெரகோட்டா இராணுவத்தின் அருங்காட்சியகத்தில், உள்நாட்டு சுற்றுப்பயணி வேலியின் மீது ஏறி குதித்ததில், 2 பண்டைய களிமண் ‘வீரர்களுக்கு’ சேதம் ஏற்பட்டது.
30 வயது அவ்வாடவர் வெள்ளிக்கிழமை சியான் நகரில் உள்ள டெரகோட்டா இராணுவ அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டுள்ளார்.
அப்போது திடீரென வேலி மற்றும் பாதுகாப்பு வலையின் மீது அவர் ஏறி குதித்ததாக அதிகாரிகள் கூறினர்.
அதில் 2 களிமண் வீரர்கள் சிலை சேதமடைந்தன.
எனினும் விரைந்து செயல்பட்டு அதிகாரிகள் அவ்வாடவரைக் கட்டுப்படுத்தினர்.
Sun என அடையாளம் கூறப்பட்ட அவ்வாடவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் மேற்கொண்டு விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அருங்காட்சியகம் தற்போது வழக்கம் போல் மக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
முதல் பேரரசரின் கல்லறையைக் காக்க கிமு 209-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 8,000 பேர் கொண்ட டெரகோட்டா இராணுவம், சீனாவின் மிக முக்கியமான தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும்.
இது பண்டைய சீன கலை மற்றும் இராணுவ நுட்பத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
ஒரு முக்கிய சுற்றுலா தலமாக இருக்கும் இது, 1987 முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகவும் இருந்து வருகிறது.